world

img

பிலிப்பைன்ஸ் – சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி  

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.  

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அதனை தொடர்ந்து கனமழையும் கொட்டிதீர்த்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சூறாவளி காற்றால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் சூறாவளி பாதிப்பிலிருந்து, மக்களைக் காக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தப்பித்தனர்.  

இதே புயல், மாகாணத்தில் மேற்கு நோக்கி வீசும்போது மணிக்கு 155 கி.மீ(96 மைல்) வேகத்தில் காற்று வீசியது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

;